Friday 3rd of May 2024 07:06:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜனாதிபதியும் பிரதமரும் கொவிட் தடுப்பூசி ஏற்றல்!

ஜனாதிபதியும் பிரதமரும் கொவிட் தடுப்பூசி ஏற்றல்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசியை ஜனாதிபதியும், பிரதமரும் போட்டுக்கொண்டுள்ளார்களா? என்றும், இல்லை என்றால் எப்போது அவர்கள் அதனைப் போட்டுக்கொள்வார்கள் என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, "அவர்கள் இருவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்" என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE